கொதிக்கும் எண்ணெய்க்குள் கைவிட்டு வடை சுடும் "அன்பு"
சேலம்:
மேட்டூரைச் சேர்ந்த அன்பு என்ற இளைஞர் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கொதிக்கும்எண்ணெயிலிருந்து வெறும் கையால் வடைகளை எடுத்து அதிசயிக்க வைத்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் அன்பு. இவர் பலகாரக் கடை வைத்திருக்கிறார். சாதனை படைக்கவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர் அன்பு. இதற்காக என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.
தனது பலகாரக் கடைக்காக வடை சுடும்போது வடையைக் கரண்டியால் எடுப்பதற்குப் பதில் வெறும் கையால்எடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டு வடையை லாவகமாக அவர் எடுத்துப் போடஆரம்பித்தார். இதைப் பார்த்த பொது மக்கள் அதிசயத்துடன் அங்கு கூடி அவரை வியந்து பாராட்டினர்.
கொதிக்கும் எண்ணெய்க்குள் அன்பு கையை விட்டு வடையை எடுத்துப் போடுவதைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம்அதிகரித்து வருகிறது.
தனது இந்தச் சாதனை, "கின்னஸ்" அல்லது "லிம்கா" சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று ஆவலுடன்எதிர்பார்க்கிறார் அன்பு.
-->












Click it and Unblock the Notifications