பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுவாரா சதாம்?
மாஸ்கோ:
ஈராக் போரை நிறுத்த சதாம் ஹூசேனுக்கு புகலிடம் தர பஹ்ரைன் நாடு முன் வந்துள்ளது.
தங்களது நாட்டுக்கு வந்துவிடும்படி நேற்றே அந்த நாடு சதாம் ஹூசேனுக்கு அழைப்பு விடுத்தது. இதே போலமேலும் 5 நாடுகளும் சதாமுக்கு தஞ்சம் தர முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக முன்னாள் யு.எஸ்.எஸ்.ஆர். நாடான பெலாரஸ் சதாமுக்கு ரகசிய அழைப்பு விடுத்திருப்பதாகத்தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நாட்டுக்கும் ஈராக்குக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது.மேலும் சதாமின் நெருங்கிய நண்பரான ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் சமீபத்தில் பெலாரஸ் தலைநகர்மின்ஸ்க் நகருக்குச் சென்று அந் நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது சதாம் ஹூசேனுக்குபுகலிடம் தருவது குறித்து இரு தரப்பினரும் பேசியதாகத் தெரிகிறது.
அதே போல பாக்தாக் நகர மேயரும் சமீபத்தில் 6 முறை பெலாரஸ் போய் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதஇறுதியில் சதாமின் மகன் உதய்யும் பெலாரஸ் செல்லத் திட்டமிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications