11 மாணவர்களை பட்டினி போட்டி விடுதி வார்டன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
குழித்துறையில் உள்ள ஆதி திராவிட மாணவர் விடுதியில் 11 மாணவர்களுக்கு மட்டும் சாப்பாடு போடாமல்துன்புறுத்திய விடுதி வார்டன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள இந்த விடுதியின் வார்டன் குறிப்பிட்ட 11 மாணவர்களுக்குமட்டும் சாப்பாடு போடாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ககந்தீப் சிங் பேடிக்கு ஏராளமான புகார்கள் வர ஆரம்பித்தன.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த ஆதி திராவிடர் நலத் துறை அதிகாரி மகேந்திரவேல்நியமிக்கப்பட்டார். தீவிர விசாரணைக்குப் பின்னர் அவர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அறிக்கையில், மாணவர்களை விடுதி வார்டன் தாக்கியிருப்பது உண்மைதான் என்பது தெரிய வந்தது. இதையடுத்துவிடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications