சதாமை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணை
பாக்தாத்:
இன்று காலை அமெரிக்கா தனது முதல் தாக்குதலை சதாம் ஹூசேனைக் குறி வைத்து நடத்தியுள்ளது.காலை 6 மணிக்கு அமெரிக்கக் கெடு முடிவடைந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம்என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் காலை 6.30 மணியளவில் முதல் ஏவுகணைத் தாக்குதல் பாக்தாத் நகரின்தெற்குப் பகுதியில் நடந்தது.
சில ஈராக்கியத் தலைவர்கள் பதுங்கி இருந்த வீடு தாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அந்தத்தலைவர்கள் யார், யார் என்பதை தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த வீட்டில் சதாம் ஹூசேன் இருந்தார் என்று இப்போது தெரியவந்துள்ளது. இத் தாக்குதலில் அவர்காயமடைந்தாரா?. அவர் வேறிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டாரா? போன்ற விவரங்களை அமெரிக்காதெரிவிக்கவில்லை.
எல்லையில் தரைப்படை சண்டை:
இதற்கிடையே ஈராக்- குவைத் எல்லையில் அமெரிக்கப் படைகளை நோக்கி ஈராக் படைகள் ஆர்ட்டிலரிதுப்பாக்கிகளால் தாக்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தீவிர துப்பாக்கிச்சண்டையும் தொடங்கியுள்ளது.
குவிந்திருக்கும் அமெரிக்கப் படைகள்:
அமெரிக்க- பிரிட்டன் படைகளின் ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் குவைத்எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரமும் ஈராக்குக்குள் நுழையலாம் என்று தெரிகிறது.
தப்புவது எப்படி?
இதற்கிடையே ஈராக் படைகளின் மீது அமெரிக்க போர் விமானங்கள் இன்று லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை வீசின.
அதில், அமெரிக்கப் படைகளைத் தாக்க வேண்டாம். உள்ளே நுழையும் அமெரிக்கப் படைகளைத் தாக்காமல்இருந்தால் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வோம். உங்களுக்கு எல்லா உதவியும்செய்வோம்.
ஈராக்கின் டாங்கிகள், கவச வாகனங்கள், ராணுவ வாகனங்களை எங்கள் விமானங்கள் தாக்கும். எனவே, அவற்றைவிட்டு 1 கி.மீ. தூரம் தள்ளியே நில்லுங்கள். சரணடைய விரும்பினால் வெள்ளைக் கொடியை காட்டுங்கள் என்றுகூறப்பட்டுள்ளது.