காஞ்சி மடத்திற்கு வருகிறார் நேபாள மன்னர்
சென்னை:
நேபாள மன்னர் ஞானேந்திராவும் அவரது மனைவியும் 5 நாள் பயணமாக 22ம் தேதி சென்னை வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் 22ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு டெல்லியிலிருந்து மன்னரும் அவரது மனைவியும் தனி விமானத்தில்சென்னை வருகிறார்கள்.
அடுத்த நாள் அவர்கள் காஞ்சிபுரம் செல்கிறார்கள். அங்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்சன்யாசம் மேற்கொண்டதன் பொன் விழா தொடர்பான கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து இருவரும் 24ம் தேதி மதுரை புறப்பட்டுச் செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமிதரிசனம் செய்கிறார்கள்.
பின்னர் 25ம் தேதி ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி வழிபாடு செய்யும் நேபாள மன்னரும்அவருடைய மனைவியும் மீண்டும் மதுரை திரும்பி, 26ம் தேதி திருப்பதிக்கு பயணிக்கிறார்கள்.
-->