ஈராக்கிய ரேடியோ கைப்பற்றியது அமெரிக்கா
பாக்தாத்:
ஈராக்கிய ரேடியோ அலைவரிசையை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது.
இதனால் இனி ஈராக்கிய ரேடியோ செயல்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. அலைவரிசையை (frequency) தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ள பென்டகன் விரைவில் தனது ஒலிபரப்பை இந்த ரேடியோவில் தொடங்கும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த ரேடியோவில் இன்று காலை பேசிய ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசேனின் மகன் குவாசி ஹூசேன், இந்த நாட்டைஇறைவன் காப்பாற்றுவான். ஈராக்கில் நுழையும் அமெரிக்கர்கள் பிணமாகத் தான் திரும்புவார்கள் என்றார்.
வாஜ்பாய் ஆலோசனை:
ஈராக்கில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியதையடுத்து தேசிய பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டி உறுப்பினர்களுடம் பிரதமர் வாஜ்பாய்இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.
வளைகுடாவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பல்களின் நடமாட்டம்,இந்திய நீர்மூழ்கிகளை இடம் மாற்றுவது, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு, நாட்டின் பெட்ரோலிய கையிருப்பு ஆகிய விவகாரங்கள்குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.
வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், முப்படைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூதரகங்களுக்கு பாதுகாப்பு:
இந் நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்தூதரகங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்:
அதே போல உலகம் முழுவதும் அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் அபாயம் அதிகம்உள்ள பாகிஸ்தானில் தனது தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. சில ஊழியர்கள் தவிர மற்ற அனைவரையும் உடனே நாடு திரும்பவும்அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
புஷ்- பிளேர் பேச்சு:
இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் இன்று தொலைபேசியில் ஆலோசனைநடத்தினர்.
-->