விவசாயிகள் தற்கொலை தொடரலாம்: ராமதாஸ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்வது தொடரலாம் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, இலவச மின்சாரம் ரத்து ஆகியவற்றைக் கண்டித்து பாமக தொண்டர்கள் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். அரசின் இந்தஅறிவிப்பால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
திருச்சியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications