ஈராக் பதிலடி: குவைத் மீது ஸ்கட் ஏவுகணை தாக்குதல்
குவைத் பாலைவனப் பகுதி:
குவைத் மீது ஈராக் ஸ்கட் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ஏவுகணையை மட்டுமே அமெரிக்காவின் பேட்ரியாட்ஏவுகணை நடுவானில் தடுத்து தகர்த்தது. ஆனால், 6 ஏவுகணைகள் குவைத்துக்குள் விழுந்து வெடித்தன. ஆனால், இதில் எத்தனை பேர்பலியானார்கள் என்று தெரியவில்லை.
ஈராக் ஏவிய ஏவுகணைகளில் ஒன்று குவைத் பாலைவனப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை நோக்கி வந்தது. ஆனால்,அந்த ஏவுகணையை பேட்ரியாட் ரக ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் நடுவானில் தாக்கி அழித்தன.
மற்ற 6 ஏவுகணைகளும் குவைத்தின் வட பகுதியில் விழுந்து வெடித்தன.
ஈராக்கில் இருந்து இன்று பிற்பகலில் ஏவுகணை கிளம்பியுடன் அதைக் கண்டறிந்த உளவு விமானங்களும் செயற்கைக் கோள்களும் உடனேஅது குறித்து அமெரிக்கப் படைகளுக்கு தகவல் தந்தன. இந்த ஏவுகணையில் ரசாயன ஆயுதம் இருக்கும் என்ற அச்சம் இருந்ததால்அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு உடைகளை அணிந்து பதுங்கினர்.
ஆனால், இந்தப் படையினரை நோக்கி வந்த ஏவுகணையை 3 பேட்ரியாட் ஏவுகணைகள் நடுவானில் வழி மறித்துத் தாக்கின. இதில் அந்தஏவுகணை வெடித்துச் சிதறியது.
ஆனால், மற்ற ஏவுகணைகள் குவைத்துக்குள் வந்து விழுந்தன. இந்தத் தாக்குதல் நடந்தவுடன் குவைத் முழுவதும் அபாய எச்சரிக்கைஒலிக்கப்பட்டது.
குவைத்தில் பெரும் பீதி:
இந்தத் தாக்குதலையடுத்து குவைத் முழுவதும் பெரும் பீதி பரவியுள்ளது. அவ்வப்போது தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி நாடுமுழுவதும் ஒலித்துக் கொண்டே உள்ளது. இந்த ஒலியைக் கேட்டவுடன் அனைவரும் ரசாயன, வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரானமுகமூடிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் குவைத் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டினர் அங்கிருந்து தப்பியோடுவதில்தீவிரம் காட்டி வருகின்றனர்.
நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், வீடுகளை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் நாட்டு மக்களை குவைத் அரசுஎச்சரித்துள்ளது. அனைத்துத் தெருக்களிலும் குவைத் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் நடமாட்டம் மட்டுமே உள்ளது.
-->