For Daily Alerts
Just In
அமெரிக்காவிடம் சரணடைந்த 18 ஈராக் வீரர்கள்
குவைத்-ஈராக் எல்லை:
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பாகவே குவைத் எல்லையில் இருந்த 18 ஈராக் வீரர்கள்அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
எல்லை வழியாக குவைத்துக்குள் வந்த அந்த வீரர்கள் அங்கிருந்த அமெரிக்க ராணுவத்திடம் தங்கள் ஆயுதங்களைஒப்படைத்து விட்டு சரணடைந்து விட்டனர்.
முதலில் 15 ஈராக் படையினர் வந்து சரணடைந்ததாகவும் அதன் பின்னர் மேலும் மூன்று பேர் வந்துசரணடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர் துவங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே இவர்கள் வந்து சரணடைந்துள்ளனர். பின்னர்அவர்கள் குவைத் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் சில ஈராக் வீரர்கள் விரைவில் சரணடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
Story first published: Thursday, March 20, 2003, 5:30 [IST]