"வீடியோ கான்பரன்ஸ்" மூலம் கலெக்டர்கள், எஸ்.பிக்களுடன் ஜெ. பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் "வீடியோ கான்பரன்சிங்" என்ற நேரடி தொலைத் தொடர்பு வசதியை முதல்வர்ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

ஒரு இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு இடங்களைத் தொடர்பு கொண்டு, மறு முனையில் இருப்பவரைநேரடியாகப் பார்த்துக் கொண்டே பேசுவதற்கு "வீடியோ கான்பரன்சிங்" முறை உதவுகிறது. இந்த முறை தற்போதுதலைமைச் செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள் துறைச்செயலாளர் சையத் முனீர் ஹோடா, சேலம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டஎஸ்.பிக்கள் ஆகியோருடன் "வீடியோ கான்பரன்சிங்" மூலம் பேசினார்.

இந்த "வீடியோ கான்பரன்சிங்" வசதி மூலம் 29 மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கள், அரசுத்துறைச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோரோடு சென்னையில் இருந்து கொண்டே பேசமுடியும்.

ஒரே நேரத்தில் மூன்ற பேருடன் பேசும் வசதியும் இதில் உள்ளது. இந்த ஏற்பாட்டுக்காக ரூ.1.60 கோடிசெலவிடப்பட்டுள்ளது.

கால விரையம், பண விரையத்தைத் தவிர்க்க இந்த "வீடியோ கான்பரன்சிங்" முறை பெரிதும் உதவும் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+