திண்டுக்கல்: கோவில் திருவிழாவில் கலவரம்- ஒருவர் கொலை
திண்டுக்கல்:
மதுரை அருகே உள்ள நத்தம் பகுதியில் கோவில் திருவிழா தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே நடந்தமோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது புன்னம் பட்டணம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள கோவிலில்விழா எடுப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விழா தொடர்பாக கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த இன்னொரு சமூகத்தினர் அந்த இடத்திற்கு வந்து கலாட்டாவில் ஈடுபட்டனர்.
இதில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள், கம்புகளைக் கொண்டு பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் 8 பேர்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜவஹர் சந்திரசேகர் தலைமையில் போலீஸார்விரைந்தனர். ஆயுதப் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு பிரிவினரையும் அழைத்து சமாதானப்பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
இப்போது அங்கு அமைதி நிலவுகிறது. மோதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
-->