For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாப்பாபட்டி, கீரிப்பட்டி தேர்தலை புறக்கணிப்போம்: திருமாவளவன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துத் தேர்தல்களை மீண்டும்புறக்கணிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை சென்றிருந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தலித் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசு தவறி விட்டது. அவர்களுக்குரிய போதிய பாதுகாப்புக்குஅரசு உத்தரவாதம் தரவில்லை. வெறும் கண்துடைப்புக்காகவே தேர்தல்களை நடத்தி வருகிறது.

மதுரை அருகே நத்தம் கிராமத்தில் தலித் ஒருவர் ஜாதிக் கலவரத்தில் பலியாகியுள்ளார். கோவில் விழாவில் தலித்மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று பிற ஜாதியினர் தடுத்துள்ளனர். மீறி பங்கெடுக்க முயற்சித்ததால்தான்கலவரம் மூண்டு ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது.

இதிலிருந்தே தலித் மக்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தச் சூழ்நிலையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துத் தேர்தலில் தலித் மக்கள்போட்டியிட்டால் அவர்களது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இந்தத் தேர்தலை நாங்கள்தொடர்ந்து புறக்கணிப்போம் என்றார் திருமாவளவன்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X