For Daily Alerts
Just In
தர்மபுரி அருகே லாரி மோதி 3 பேர் சாவு
தர்மபுரி:
பெங்களூரிலிருந்து தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடந்த சந்தனக் கூடு விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கி 3 பேர் இறந்தனர்.
தொப்பூரில் உள்ள தர்ஹாவில் சந்தனக் கூடு விழா நடந்தது. இதைக் காண சிலர் வேன் மூலம்பெங்களூரிலிருந்து தொப்பூர் வந்திருந்தனர்.
அங்கு சந்தனக் கூடு விழா முடிந்ததும் பெங்களூர் கிளம்பினர். தொப்பூர் கணவாய் சாலையில்அவர்களது வேன் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 11 பேர்இவ்விபத்தில் காயமடைந்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.
-->
Comments
Story first published: Saturday, March 22, 2003, 5:30 [IST]