கோபி அன்னான் மீது ஈராக் கடும் குற்றச்சாட்டு
ஐ.நா. சபை:
ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஈராக் குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நாவுக்கான ஈராக்கிய தூதர் முகம்மத் அல்தொவ்ரி நிருபர்களிடம் பேசுகையில், இதுவரை அன்னான் போருக்குஎதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. போர் ஆரம்பிக்கும் முன்பாகவே ஐ.நா. ஊழியர்களை திரும்பஅழைத்துவிட்டார்.
அதே போல ஈராக்கியர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்துக்கு தன்னையே தலைவாரப் போடும்படி அவர்கேட்பதும் அசிங்கமான செயல். ஈராக்கிய எண்ணெய்யை இவர் தனது கட்டுப்பாட்டில் எடுத்து பின்னர்அமெரிக்கா- இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயல்கிறார்.
இவரது செயலால் ஐ.நாவின் எதிர்காலமே கேள்விக்குரியாகிவிட்டது என்றார்.
இதற்கிடையே ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை ஐ.நாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த எண்ணெய்மூலம் கிடைக்கும் வருவாயில் ஈராக் மக்களுக்கு உணவு வழங்குவது குறித்து இன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்விவாதிக்க உள்ளது.
ஈராக் தூதரை வெளியேற்ற ரஷ்யா மறுப்பு:
ஈராக் தூதரை வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துவிட்டது. இதுபோன்ற உத்தரவு அளிக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது.
தீ வைக்கவில்லை: ஈராக் மறுப்பு
இதற்கிடையே எண்ணெய் கிணறுகளுக்கு நாங்கள் தீ வைக்கவில்லை என ஈராக் கூறியுள்ளது. அமெரிக்கப்படைகள் தான் இந்தச் செயலைச் செய்ததாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.
-->