ஜெயாவின் முரட்டுப் பிடிவாதம்: ப.சி. தாக்கு
கும்பகோணம்:
ஜெயலலிதா அரசின் முரட்டுத் தனமான பிடிவாதம் காரணமாகத்தான் தமிழகத்தில் சம்பா மற்றும்குறுவை சாகுபடிகள் நடக்காமலேயே போய் விட்டதாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியின்பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல்செயல்படுகிறது.
அவர்களது பிடிவாதம் காரணமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா மற்றும் குறுவைசாகுபடிகள் நடக்காமலேயே போய்விட்டன.
இலவச மின்சாரத்தை ரத்து செய்தது தவறு. அதே போல மின் கட்டணத்தை உயர்த்தியதும் மாபெரும்தவறு. இதனால் விவசாயிகளும் பொது மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
மின் வாரியத்தை தனி அமைப்பாக மாற்றி அதன் பிறகு தனியார்மயமாக்கினால் பலன் இருக்கும்.மாறாக அப்படியே தனியாரிடம் ஒப்படைத்தால் ஊழியர்களும் பொதுமக்களும்தான்பாதிக்கப்படுவார்கள்.
பொடா சட்டம் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவே பயன்படும். இதுதான் தமிழகத்தில் இப்போதுநடந்து வருகிறது என்றார் சிதம்பரம்.
-->












Click it and Unblock the Notifications