நகை தொழிலாளிகள் செய்த தங்க உலகக் கோப்பைகள்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லைச் சேர்ந்த இரண்டு நகைத் தொழிலாளிகள் உலகக் கோப்பை கிரிக்கெட்கோப்பையைப் போலவே தங்கத்தினால் ஆன இரண்டு சிறிய கோப்பைகளை வடிவமைத்துள்ளனர்.
அங்குராஜ், சக்திவேல் ஆகிய இரு நகைத் தொழிலாளிகளும் பயங்கர கிரிக்கெட் வெறியர்கள்.
இவர்கள் இருவரும் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத்தவறாமல் டி.வியில் பார்த்து வருகின்றனர்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் வடிவம்இவர்களுக்குப் பிடித்துப் போகவே அதே போன்ற ஒரு மாதிரிக் கோப்பையைத் தங்கத்தில் செய்யமுடிவெடுத்தனர்.
இதையடுத்து முழுவதும் தங்கத்தினால் ஆன இரண்டு மினி கோப்பைகளை அவர்கள் தயார்செய்துள்ளனர். ஒரு கோப்பை 740 கிராம் எடை கொண்டது. இன்னொரு கோப்பை 190 மில்லிகிராம் எடை கொண்டது.
இந்தக் கோப்பையை இப்போதைக்கு விற்கும் எண்ணம் இல்லை என்று கூறும் இவர்கள், இந்தியாஉலகக் கோப்பையை வென்று வந்தால் இந்தக் கோப்பைகளை விற்போம் என்று தெரிவித்துள்ளனர்.
நாளை இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கானஇறுதி ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications