For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரம்பலூர்: வாந்தி, மயக்கத்தால் 9 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அப்பகுதியில்பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் கடந்த சில மாதங்களாகப் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஐந்து பேர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இவர்களில் மேலும் நான்கு பேர் இறந்துள்ளனர். இன்னும் சிலரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது. ஆத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் அவர்கள்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே மேலும் சிலர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

அசுத்தமான குடி நீரைக் குடிப்பதால் ஏற்படும் நோய் காரணமாகவே பூலாங்குறிச்சி கிராம மக்கள்வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அந்தக் கிராம மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. தங்கள் கிராமத்திற்கு உரியமருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X