ஈரானுக்குள் விழுந்த அமெரிக்க குண்டுகள்
தெஹ்ரான்:
அமெரிக்க விமானங்களில் இருந்து வீசப்பட்ட இரு குண்டுகள் ஈரானுக்குள் விழுந்து வெடித்தன. மேலும் ஈரான்வான் எல்லைக்குள் பல அமெரிக்க- பிரிட்டிஷ் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருவதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
ஈராக்கை ஒட்டிய மெனியோகி பகுதிக்குள் பெட்ரோலிய கிடங்கின் மீது அமெரிக்க குண்டுகள் விழுந்துவெடித்தன. இதில் 2 ஈரானியர்கள் படுகாயமடைந்தனர்.
இது தவிர ஈராக்கைத் தாக்கச் செல்லும் அமெரிக்க- பிரிட்டிஷ் விமானங்கள் ஈரானின் அபதான் பகுதிவான்வெளிக்குள் அத்துமீறி நுழைவதாக ஈரான் ராணுவ கமாண்டர் அந் நாட்டின் இர்னா செய்தி நிறுவனத்திடம்தெரிவித்தார். நேற்றுமுதல் இதுவரை 3 முறை அமெரிக்க விமானங்கள் தனது நாட்டுக்குள் புகுந்ததாக ஈரான்கூறியுள்ளது.
அமெரிக்காவுடன் அந்த நாட்டுக்கு நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான்- அமெரிக்கா இடையேதூதரக உறவும் இல்லை.
சுவிஸ் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் தூதர் தான் அமெரிக்கா- ஈரான் இடையிலான தூதரக விவகாரங்களை கவனித்துவருகிறார். தனது வான் எல்லையில் அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் அத்துமீறி நுழைவதாகவும் அதை உடனேநிறுத்திக் கொள்ளூமாறும் சுவிஸ் நாட்டின் பிரிட்டிஷ் தூதரிடம் ஈரான் கண்டனக் கடிதம் கொடுத்துள்ளது.
இந்தப் போர் தொடங்கியவுடன் தனது வான்வெளியை ஈரான் மூடியது குறிப்பிடத்தக்கது. தனது வான் எல்லையில்ஈராக், அமெரிக்கா, பிரிட்டிஷ் விமானங்கள் நுழையக் கூடாது என தடை விதித்தது.
-->