பேய் நகரமாக மாறிய குவைத்: 422 இந்தியர்கள் திரும்பினர்
குவைத்:
ஈராக் எண்ணெய் கிணறுகள் எரிவதால் எழும் கரும்புகை, சைரன் ஒலி, ஹெலிகாப்டர்கள், விமானங்களின் சத்தம்,சீறி வந்து விழும் ஏவுககைள் என குவைத் நாடே பேய் நகரமாக மாறியிருக்கிறது.
ஈராக்கிய ஏவுகணை வந்து விழுந்து வெடிக்கும்போதெலலாம் அதில் ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருக்கலாம்என்ற அச்சத்தில் குவைத் நடுங்குகிறது. மக்கள் அனைவரும் அருகாமை கட்டடங்களிலும் கார்களிலும் புகுந்துமுகமூடிகளை அணிந்து கொண்டு பதுங்குகிறார்கள்.
ஏவுகணை வந்து கொண்டிருப்பதை எச்சரிக்கும் சைரன்கள் சத்தம் கேட்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். ஈராக்கியஏவுகணைத் தாக்குதல்கள் குறைந்துவிட்டாலும் கூட மக்களிடையே பீதி மட்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வெள்ளிக்கிழமையான நேற்று வழக்கமாக மக்கள் கூட்டம் தெருக்களில் பெருமளவில் இருக்கும். ஆனால்,தொழுகைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வந்தனர். பிரார்த்தனை முடிந்தவுடன் வீடுகளில் பதுங்கிக்கொண்டனர்.
நேற்று நள்ளிரவில் ஒரு ஸ்கட் ஈராக்கில் இருந்து பாய்ந்து வந்தது. உடனே எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்பட்டது.அது எந்த வீட்டில் விழுந்து வெடிக்குமோ என்ன கிலி பரவிய நிலையில் குவைத்தைத் தாண்டிப் போய் கடலில்விழுந்தது.
குவைத்தில் நிம்மதி தொலைந்து போயிருக்கிறது.
422 இந்தியர்கள் நாடு திரும்பினர்
இதற்கிடையே குவைத்தில் இருந்து இன்று 422 இந்தியர்கள் இன்று மும்பை வந்து சேர்ந்தனர்.
போர் தொடங்கியதில் இருந்து குவைத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிருக்கு அஞ்சி இந்தியாதிரும்பியவண்ணம் உள்ளனர்.
இன்று ஏர்-இந்தியாவின் போயிங் சிறப்பு விமானத்தில் 422 பயணிகள் மும்பை வந்திறங்கினர். முன்னதாக 200இருக்கைகள் கொண்ட ஏர் பஸ் விமானத்தை ஏர் இந்தியா இயக்க இருந்தது. ஆனால், இந்தியா திரும்ப விரும்பும்இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 410 சீட்கள் கொண்ட போயிங் விமானம் இயக்கப்பட்டது.
இதில் 13 குழந்தைகள் உள்பட 422 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். மேலும் நேற்று வந்திறங்கிய பயணிகளின்பெட்டிகளும் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டன.
இது தவிர இன்னொரு ஏர் இந்தியா போயிங் விமானம் இன்று இரவு குவைத் செல்கிறது.
-->