அமெரிக்கா, ஈராக்குக்கு புலிகள் அறிவுரை
ஹகோனே:
அமைதிக்கான வழிமுறைகளை எங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று அமெரிக்காமற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம் அறிவுரை கூறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே உள்ள ஹகோனே நகரில் புலிகளுக்கும் இலங்கைஅரசுத் தரப்பினருக்கும் இடையிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்றுடன்நிறைவடைந்தன.
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியதை அடுத்து இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நேற்று முன்தினமும் நேற்றும் முக்கியமானவிவாதங்கள் குறித்து இரு தரப்பினரும் பேசவில்லை. நேற்று காலை முறைப்படி ஜப்பான் பேச்சுக்கள்முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பாலசிங்கம் பேசுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இன்றி ஈராக் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியிப்பதுசரியான செயல் அல்ல.
அதற்காக நாங்கள் ஈராக்கை ஆதரிக்கிறோம் என்று நினைத்துவிடக் கூடாது. ஐ.நா. தீர்மானத்திற்குக்கட்டுப்பட மறுத்துள்ள அந்நாட்டையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
வன்முறைக்குப் பெயர் போன நாங்களே தற்போது அமைதிப் பாதைக்கு முழுமையாகத்திரும்பியுள்ளோம். அமைதிக்காக நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள், அனைத்து வன்முறைஇயக்கங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமைதி வழிகளில் ஈடுபடுவது எப்படி என்பதை எங்களிடமிருந்து அமெரிக்காவும், ஈராக்கும்கற்றுக் கொள்ள வேண்டும். அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் நீண்ட காலப் பிரச்சனைகளைநிச்சம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றார் பாலசிங்கம்.
இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான அமைச்சர் பெய்ரிஸும்பாலசிங்கத்தின் கருத்துக்களை வரவேற்றார். "புலிகளும் நாங்களும் அமைதிப் பேச்சுக்கள் மூலம் பலபிரச்சனைகளைத் தீர்த்துள்ளோம். அமெரிக்காவும் ஈராக்கும் எங்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் பெய்ரிஸ்.












Click it and Unblock the Notifications