குடிநீர் கோரி பாமக எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்
திருத்தணி:
திருத்தணியில் குடிநீர் கோரி பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவான ரவிராஜ் பொதுமக்களுடன்உண்ணாவிரதம் இருந்தார். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரைப் புறக்கணித்து அவர்உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணி பேரூராட்சிப் பகுதியில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் சரிவர வருவதில்லை என்ற புகார்எழுந்தது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பேரூராட்சிநிர்வாகிகளிடம் பொதுமக்கள் குறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுதெரிகிறது.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏவான ரவிராஜை மக்கள் அணுகினர்.
இதைத் தொடர்ந்து சட்டசபைக் கூட்டத்திற்குக் கூட போகாமல் பொதுமக்களுடன் திருத்தணி நகரின்மையப் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார் ரவிராஜ்.
தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து உடனடியாகக் குடிநீருக்கு ஏற்பாடு செய்வதாகக்கூறினர். இதையடுத்து ரவிராஜ் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications