சென்னையில் ரூ.1.2 கோடி பிரவுன் சுகர் பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை:
ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகர் போதைப் பொருளைக் கடத்திய 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போதைப் பொருள் விற்பனை அதிகம் நடப்பதாகப்போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போதைப் பொருள் விற்கும் ஒரு கும்பலை, மாறு வேடத்தில் தொடர்பு கொண்டபோலீஸார் அவர்களிடம் பிரவுன் சுகர் தேவை என்று கேட்டுள்ளனர். அதற்கு வால்டாக்ஸ் சாலையில்வந்து நிற்குமாறு அந்தக் கும்பல் கூறியது.
இதையடுத்து நேற்று காலை பூக்கடை துணை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையிலானபோலீஸ் குழுவினர் வால்டாக்ஸ் சாலையில் மறைவாகக் காத்திருந்தனர்.
மாறு வேடத்தில் சென்ற சில போலீஸார் போதைப் பொருள் கும்பலை அணுகினர். அப்போது மூன்றுபேர் தங்களிடம் இருந்த பிரவுன் சுகர் பாக்கெட்டுகளை அவர்களிடம் கொடுத்தனர்.
உடனடியாகப் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிரவுன் சுகரும்கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.2 கோடியாகும்.
-->












Click it and Unblock the Notifications