For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போருக்கு எதிராக தொடர்கின்றன மக்கள் போராட்டங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கெய்ரோ:

போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் போருக்கு எதிரான போராட்டங்களும்தீவிரமடைந்து கொண்டுள்ளன.

பெரும்பாலான நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்க போராட்டக்காரர்கள் முயன்றனர்.

அமெரிக்காவுக்கு தீவிரமான ஆதரவு தெரிவித்து வரும் ஏமன் நாட்டில் நடந்த போராட்டம் வன்முறையாகமாறியது. அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைய முயன்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே சண்டைவெடித்தது.

இதில் போலீசார் நடத்தியத் தாக்குதலில் 4 மக்கள் இறந்தனர்.

அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் வழக்கறிஞர்கள் தலைமையில் மாபெரும் அமெரிக்க எதிர்ப்புப்போராட்டம் நடந்தது. இங்கும் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே நடந்த மோதலில் 40 பேர்காயமடைந்தனர்.

ஜோர்டானிலும் இதே போன்ற போராட்டங்கள் நடந்தன. இது தவிர உலகம் முழுவதும் போராட்டஙகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

போருக்கு தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வரும் பிரான்ஸ் அதிபர் சிராக், பிரஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பியயூனியன் நாடுகள் கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா- பிரிட்டனை எதிர்த்துப் பேசினார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் சிராக்கும் கைகுலுக்கிக் கொண்டனர்.ஆனால், இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

பெங்களூர், காசர்கோட்டில்..

பெங்களூரில் இரண்டாவது நாளாக இன்றும் போருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதில் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ்சின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.

அதே போல கேரள மாநிலம் காசர்கோட்டிலும் போருக்கு எதிராக கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும்நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

பங்களாதேஷில் பந்த்:

ஈராக் மீது தாக்குதலைக் கண்டித்து பங்களாதேஷில் இன்று நாடு தழுவிய பந்த் நடந்து வருகிறது. நாடு முழுவதும்கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X