வட ஈராக்கில் ஊடுருவியது துருக்கிப் படை

Subscribe to Oneindia Tamil

அங்காரா:

அமெரிக்க-பிரிட்டன் படைகள் தெற்கு ஈராக்கில் சுமார் 150 கி.மீ. நுழைந்துவிட்ட நிலையில் வடக்கு ஈராக்குக்குள்துருக்கி நாட்டுப் படைகள் புகுந்துள்ளன. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் போரை முதலில் துருக்கி ஆதரிக்க மறுத்தது. தனது நாட்டு விமானத் தளங்களைப் பயன்படுத்தவும்அமெரிக்காவுக்கு அனுமதி தர மறுத்தது. ஆனால், பல பில்லியன் நிதியுதவி தருவதாக அமெரிக்காஉறுதியளித்ததால் தனது விமான தளங்களை அமெரிக்காவுக்குத் திறந்துவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவே எதிர்பாராத வகையில் வடக்கு ஈராக்குக்குள் சுமார் 1,000 கமாண்டோ படைகளைதுருக்கி அனுப்பியுள்ளது. இந்தப் படைகள் ஈராக்கிய குர்து இனத்தினர் வசிக்கும் பகுதிகளில் நுழைந்துள்ளன.

ஈராக்கிலும் துருக்கியிலும் பெரும் அளவிலான குர்து இன மக்கள் வசித்து வருகின்றனர்.

தனது நாட்டு குர்து இனத்த்தினரை சதாம் ஹூசேன் கொலை செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து அவர்கள் துருக்கிஎல்லையை ஒட்டிய வடக்கு பகுதிக்கு நகர்ந்தனர். அங்கு அமெரிக்க உதவியுடன் குர்துஸதான் என்ற சுயாட்சிகொண்ட மாகாணத்தை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர்.

துருக்கியிலும் குர்து இனத்தினருக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவு இல்லை. துருக்கி நாட்டு அரசும் குர்துஇனத்தினரை ஒடுக்கி வருகிறது. இதனால் குர்து இனப் போராளிகள் துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இப்போது ஈராக்கின் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலுக்கு குர்து இனத்தினர் பெரும் ஆதரவு வழங்கிவருகின்றனர். போரில் ஈராக் தோல்வியடைந்தால் குர்து இனத்தினரின் கை ஓங்கும் என துருக்கி அஞ்சுகிறது.

இதைத் தடுக்க ஈராக்கின் குர்து இனப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள துருக்கி முயன்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஈராக்குக்குள் துருக்கிப் படைகள் ஊடுருவி உள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+