விமானத்துறை செயலாளர் குவைத் விரைவு: விமானங்கள் ரத்தாகுமா?
மும்பை:
ஈராக் போர் காரணமாக குவைத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நேரில் அறிந்து வர இந்தியவிமானத்துறையின் செயலாளர் கே.ராய் பால் இன்று குவைத் நகருக்குச் சென்றார்.
போர் காரணமான விமானங்களுக்கு காப்பீட்டுக் கட்டணம் (war-risk insurance) மிக அதிகமாக செலுத்த வேண்டிஉள்ளதால் ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்சும் குவைத் விமான சேவைகளை ரத்து செய்வது குறித்தும்யோசித்து வருவதாகத் தெரிகிறது.
போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் குவைத் மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. ஆனால், பெரும்பாலானஇந்தியர்களிடையே நாடு திரும்பும் அவசரம் ஏதும் இல்லை.
சில ஆயிரம் பேர் ஊர் திரும்ப அவசரம் காட்டினாலும் பெரும்பாலான இந்தியர்கள் குவைத்தில் தங்கியிருப்பதால்பிரச்சனை இல்லை என்றே நினைக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக நேற்று வழக்கமாக இயக்கப்பட்ட விமானத்தில்422 பேர் இந்தியா திரும்பியதோடு சரி. கூடுதல் விமானம் இயக்க வேண்டிய அவசியமே எழவில்லை.
இன்றும் கூட வழக்கமான ஒரு விமானம் தான் குவைத்தில் இருந்து இந்தியா வந்தது. காலையில் மும்பை வந்தஅந்த விமானத்தில் 14 கைக் குழந்தைகள் உள்பட 327 பேர் நாடு திரும்பினர். இந்த விமானத்தில் 80 சீட்கள்காலியாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நிலைமையை நேரில் கண்டறிந்து வர விமானத்துறைச் செயலாளர் கே. ராய் பாலை மத்திய அரசுகுவைத்துக்கு அனுப்பியுள்ளது. அவர் குவைத் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.இதற்கிடையே போர் தொடர்பான காப்பீட்டுக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால ஏர் இந்தியாவுக்கும்இந்தியன் ஏர்லைன்சுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இதனால் விமான சேவைகளை ரத்து செய்யலாமா என்ற சிந்தனையில் விமானத்துறை உள்ளது. ஆனால், இதைபிரதமர் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications