மருத்துவமனையில் அக்னி ராஜ் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்குத் தன்னை மாற்றக் கோரி நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதிமுக எம்.பி. அக்னிராஜு மதுரை அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டம்நடத்தினார்.

மதுரையைச் சேர்ந்த திமுக ராஜ்யசபா எம்.பியான அக்னிராஜு ரூ.1.47 கோடி நிலமோசடியில்ஈடுபட்டதாகக் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் இதய நோய் காரணமாக அரசு ராஜாஜிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. உடல் நிலை ஓரளவு குணமானதும் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து தன்னை மீண்டும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றும் வரை சாப்பிட மாட்டேன்என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அக்னிராஜு. இதய நோயாளியாக இருப்பதால்சாப்பிடாமல் இருந்தால் உடல் நிலை பாதிக்கும் என்று டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தினர்.

ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து மீண்டும் சிறப்பு வார்டுக்கு மாற்றுவதாக அவரிடம்டாக்டர்கள் உறுதியளித்தனர். அதன்படியே சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.அதன் பின்னரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அக்னிராஜு கைவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+