அமெரிக்கப் படைகளை தாக்கவில்லை: ஈரான் மறுப்பு
போ (தெற்கு ஈராக்):
ஈரான்- ஈராக் எல்லையில் அமைந்துள்ள போ வளைகுடாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஈரான் மறுத்துள்ளது.
இங்கு பறந்த அமெரிக்க, பிரிட்டிஷ் போர் விமானங்களை நோக்கியும் ஈரானியப் படைகள் சுட்டன.அமெரிக்காவை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் ஈரான் இந்தப் போரையும் எதிர்த்து வருகிறது.
ஆனால், போர் தொடங்கியது முதல் ஈரான் வான் எல்லைக்குள்ளும் அமெரிக்க விமானங்களும்ஹெலிகாப்டர்களும் ஊடுருவி வருகின்றன. அதே போல இரு ஏவுகணைகளும் ஈரானுக்குள் போய் விழுந்துவெடித்தன.
இதற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந் நிலையில் போ வளைகுடாவில் அமெரிக்கக் கமாண்டோபடையினருக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் கடந்த இரு நாட்களாக கடும் மோதல் நடந்து வருகிறது.
ஈராக்கியப் படைகளுடன் மோதி வரும் அமெரிக்கக் கமாண்டோக்களை ஈரான் இன்று பின் புறமாகத் தாக்கியதாகசெய்திகள் வந்தன. போ வளைகுடா பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஈரானியப் படைகள் தங்கள்எல்லைக்குள் இருந்தவாரே பீரங்கிகளால் தாக்கியதாக அமெரிக்கப் படைகள் கூறின.
மேலும் எல்லையில் பறந்த பிரிட்டனின் கடற்படை விமானங்களை நோக்கியும் ஈரானியப் படைகள் சுட்டன.ஆனால், இதில் அமெரிக்க படையில் யாரும் காயமடையவில்லை. விமானங்களும் கூட இத் தாக்குதலில் இருந்துதப்பிவிட்டன என அமெரிக்கப் படையினர் கூறினர்.
அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், தொடர்ந்து தாக்குதல் நடந்தால்பதிலடி தருவோம் என எச்சரித்திருந்தன.
இந் நிலையில் அமெரிக்கப் படைகளையோ அல்லது பிரிட்டிஷ் விமானங்களையோ நாங்கள் தாக்கவில்லை எனஈரான் மறுத்துள்ளது. இது ஒரு பொய் பிரச்சாரம் என்று கூறியுள்ளது.
இந்தியா- ரஷ்யா ஆலோசனை:
ஈராக் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக கோரிக்கைவிடுத்துள்ளன.
ஈராக் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் ரஷ்ய வெளியுறவுத்துறைஅமைச்சர் இகார் இவானேவும் தொலைபேசியில் விவாதித்தனர். இந்தப் பிரச்சனைக்கு ஐ.நா. மூலம் தான் தீர்வுகாண வேண்டும் என இரு நாடுளும் கருத்துத் தெரிவித்தன.
மேலும் உடனே போரை நிறுத்துமாறும் அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
சீனாவில் பாக். பிரதமர்:
ஈராக்கிய போர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஜபருல்லா ஜமாலி சீன அதிபர் ஹுன் ஜின்டாவோ, பிரதமர் வென்ஜியாபோ ஆகியோருடன் விவாதித்தார். மூன்று நாள் பயணமாக ஜமாலி சீனா சென்றுள்ளார்.
ஜப்பான் படைகளை கோரும் அமெரிக்கா:
இந் நிலையில் போர் விரைவில் முடிவடைந்துவிடும் என்றும் அதன் பின்னர் ஈராக்கில் அமைதியை நிலைநாட்டஜப்பான் தனது படைகளை அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஈராக்குக்குஎதிரான போரில் அமெரிக்காவை ஆதரித்து வரும் ஜப்பான் இந்தக் கோரிக்கையை ஏற்குமா என்றுதெரியவில்லை.
-->