"தொல்காப்பிய பூங்கா" வசூல்: திமுகவுக்கு லாபம்
சென்னை:
திருச்சியில் நடந்த "தொல்காப்பியப் பூங்கா" 4ஆம் பதிப்பு புத்தக வெளியீட்டு விழாவில் கிடைத்ததொகையிலிருந்து ரூ.9 லட்சம் நிதியை திமுக அறக்கட்டளைக்கு வழங்குவதாக அக்கட்சியின்தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சியில் "தொல்காப்பியப் பூங்கா" நூலின் 4ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்தவிழாவின்போது சுமார் 1,000 நூல்கள் விற்றுத் தீர்ந்தன. மேலும் 1,500 நூல்களுக்கு "ஆர்டர்"கொடுக்கப்பட்டது.
திருச்சி விழாவில் வசூலான தொகையில் 1,500 நூல்களை அச்சிடுவதற்குரிய செலவுகள் போகமீதமுள்ள ரூ.9 லட்சம் தொகையை திமுக அறக்கட்டளைக்கு வழங்குகிறேன்.
நலிவடைந்த நிலையில் உள்ள திமுகவினரின் குழந்தைகளுக்கு படிப்புதவி, மருத்துவ வசதிஆகியவற்றிற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே மதுரை விழாவில் வசூலான தொகையிலிருந்து ரூ.10 லட்சம் நிதி அறக்கட்டளைக்குக்கொடுக்கப்பட்டுள்ளதை நினைவு கூறுகிறேன் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
-->