மீனாட்சி அம்மனை தரிசித்தார் நேபாள மன்னர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நேபாள மன்னரும் ராணியும் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.அவர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நேபாள மன்னர் ஞானேந்திரரும், அவருடைய மனைவியும் நேபாள ராணியுமான கோமல்ராஜலட்சுமி தேவியும் தமிழகத்தில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று காஞ்சிபுரத்தில் சங்கர மடத்திற்கு விஜயம் மேற்கொண்ட நேபாள தம்பதியர் பின்னர்காமாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மதுரை வந்து சேர்ந்த அவர்களை மதுரை மாவட்ட கலெக்டர் டாக்டர்சந்திரமோகன் வரவேற்றார். பின்னர் நேபாள மன்னரும் ராணியும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு அவர்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நடனமாடி பலத்த வரவேற்புஅளித்தனர்.

பின்னர் கோவிலுக்குள் சென்ற நேபாள மன்னருக்கும் ராணிக்கும் பூரண கும்ப மரியாதைஅளிக்கப்பட்டது. இதையடுத்து மீனாட்சி அம்மனை அவர்கள் தரிசனம் செய்தனர். அப்போதுமீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம் சூட்டப்பட்டது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அம்மனுக்கு வைரக் கிரீடம் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபாள தம்பதியருக்காக மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் பூஜைகளும்நடைபெற்றன. அவர்களும் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். பின்னர் சுந்தரேஸ்வரர்சன்னிதிக்கும் சென்று அவர்கள் வழிபாடு செய்தனர்.

நேபாள மன்னருக்கு பிரசாதங்கள், பட்டு சால்வை, மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு குறித்தபுத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் கோவிலை விட்டுக் கிளம்புவதற்கு முன் நேபாளமன்னரும் ராணியும் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+