பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை முகாமில் குண்டுவெடிப்பு
மனாமா:
பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தலைமையகத்தின் மீது நேற்றிரவு மாணவர்கள் எரிவாயுசிலிண்டர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த அறைகளின்ஜன்னல், கதவுகள் சிதறின. ஆனால், யாரும் உயிரிழக்கவில்லை.
அமெரிக்கக் கடற்படையின் முக்கியப் பிரிவு பஹ்ரைனில் முகாமிட்டுள்ளது. இந்தப் படைகளுக்கு அந் நாட்டில்கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள்நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவும் இதே போல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த கடற்படை முகாமை முற்றுகையிட வந்தனர்.ஆனால், போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சில மாணவர்கள் அந்த முகாமுக்குள் ஊடுருவிஎரிவாயு சிலிண்டெர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பினர்.
இதில் அமெரிக்க வீரர்களின் அறைக் கதவுகள், ஜன்னல்கள் உடைந்தன. ஆனால், இதில் யாரும்உயிரிழக்கவில்லை.
-->