ஏலச் சீட்டு நிறுவனங்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அங்கீகாரம் பெறாமல் ஏலச் சீட்டு நடத்தி, பொதுமக்களின் பணத்தை மோசடி செய்பவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் பொன்னையன் எச்சரித்துள்ளார்.
இன்று சட்டசபையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழகத்தில் 28,412 ஏலச் சீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.
பதிவு செய்யாமல் இயங்கும் ஏலச் சீட்டு நிறுவனங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு வரவில்லை.
இருப்பினும் அங்கீகாரம் பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும்நிறுவனங்கள் குறித்து அரசுக்குப் புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை ஆறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பொன்னையன்.
-->












Click it and Unblock the Notifications