வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரின் பைலட்களை காட்டியது ஈராக் டிவி
பாக்தாத்:
தனது விவசாயப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்களில் இருந்த பைலட்களை ஈராக்சிறை பிடித்துள்ளது.
முதலில் ஹெலிகாப்டர்கள் எதையும் இழக்கவில்லை என அமெரிக்கா கூறியது. ஆனால், பாக்தாதின்தென் பகுதியில் இரு ஹெலிகாப்டர்களை தனது விவசாயப் படைகள் சுட்டு வீழ்த்தியதை ஈராக் டிவிகாட்டியது.
இதையடுத்து இரு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களைக் காணவில்லை என்று அமெரிக்கா கூறியது.ஆனாலும் அவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பைலட்களால் தரையிறக்கப்பட்டிருக்கலாம்எனவும் தெரிவித்தது.
இந் நிலையில் அந்த ஹெலிகாப்டர்களில் இருந்த இரு பைலட்களை ஈராக்கிய டிவி காட்டியது.மேலும் இருவரை விரைவில் காட்டுவோம் என ஈராக் கூறியுள்ளது.
முன்னதாக 10க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களின் சிதறிய உடல்களையும் பிடிபட்ட 5 அமெரிக்கவீரர்களையும் ஈராக் டிவி காட்டியது. இந் நிலையில் இரு பைலட்களையும் ஈராக் போர்க் கைதிகளாகபிடித்து வைத்து டிவியில் காட்டியுள்ளது அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
டிவியில் காட்டப்பட்ட இரு ஹெலிகாப்டர்கள் பைலட்களும் மிரண்டு போய் காணப்பட்டனர்.இவர்களது பெயர் டேவிட் வில்லியம், ரோனால்ட் யங் என்று தெரியவந்துள்ளது.
இந்த ஹெலிகாப்டரகளை தனது விவசாயிகள் படை சுட்டு வீழ்த்தியதாக ஈராக் கூறினாலும் இதைஅதிபர் சதாம் ஹூசேனின் மகன் உதய் கட்டுப்பாட்டில் உள்ள ரிபப்ளிகன் கார்ட் படைகள் தான்சுட்டு வீழ்த்தியதாகத் தெரிகிறது. தெற்கு பாக்தாதில் மெதினா என்ற இடத்தில் இந்தஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டன.
தரையில் விழுந்துள்ள இந்த ஹெலிகாப்டர்களில் ஏவுகணைகளும் குண்டுகளும் நவீன கருவிகள்உள்ளன. இதனால் இந்த ஹெலிகாப்டர்ளை பிற அமெரிக்க ஹெலிகாப்டர்கள் குண்டுவீசி அழிக்கமுயன்று வருகின்றன.
இன்னொரு ஹெலிகாப்டரில் பிடிபட்ட 2 பைலட்களில் ஒருவரை ஈராக்கிய போலீசார் நடுரோட்டில்வைத்து சுட்டுக் கொன்றதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.
பாக்தாதின் தென் பகுதியின் தாக்குதல் நடத்தச் சென்று வரும் பெரும்பாலான அமெரிக்க ஹெலிகாப்டர்கள்குண்டுக் காயத்துடன் தான் திரும்புகின்றன.
-->