ஈராக் போர், காஷ்மீர் படுகொலைகளுக்கு தமிழக சட்டசபை கண்டனம்
சன்னை:
ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல், காஷ்மீரில் 24 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குதமிழக சட்டசபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈராக் போரை நிறுத்துவதற்கு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எந்த ஒரு உருப்படியான காரணமும் இல்லாமல் ஈராக்கில் நுழைந்து அமெரிக்கப் படைகள் தாக்குவதைக் கண்டித்துசபாநாயகர் காளிமுத்து கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் போரினால் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் சம்பவம்...
அதேபோல் நேற்று முன்தினம் காஷ்மீரில் தீவிரவாதிகள் 24 அப்பாவி இந்துக்களைச் சுட்டுக் கொன்றதைக்கண்டித்தும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில்,
இந்தப் படுகொலைச் சம்பவத்தின் மூலம் நாம் நவீன யுகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா, அல்லதுகற்காலத்துக்குச் சென்று விட்டோமா என்ற சந்தேகம்தான் எழுகிறது.
இது ஒரு மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல். அப்பாவி உயிர்களைக் கொல்வதற்கு பயங்கரவாதிகள் எந்தஅளவுக்கும் கொடூரமாகச் செயல்படுவார்கள் என்பதை இந்தப் படுகொலைகள் காட்டுகின்றன.
எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும். இப்படி அப்பாவி மனிதர்களையும்,பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதால் தீர்வு காணவே முடியாது. உயிரிழந்தவர்களுக்கு தமிழகமக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசுமேற்கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications