குஜராத் முதல்வரின் எதிர்ப்பாளர் சுட்டுக் கொலை
அகமதாபாத்:
குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளருமான ஹரேன் பாண்ட்யா இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
குஜராத்தின் மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பாண்ட்யா கேசுபாய் படேல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார்.ஆனால், நரேந்திர மோடி முதல்வரானவுடன் இவரை அந்த முக்கியப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வருவாய்த்துறை அமைச்சராக்கினார்.
கடந்த தேர்தலில் பாண்ட்யாவுக்கு சீட் தரக் கூட மோடி மறுத்துவிட்டார். குஜராத்தில் முஸ்லீம்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டபோது அதில்முதல்வருக்கு தொடர்பு இருந்ததாக பாண்ட்யா பத்திரிக்கைகளுக்கு தகவல் தந்ததாக மோடியின் ஆதரவாளர்கள் இவர் மீது புகார் கூறிவந்தனர்.
இன்று காலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பூங்காவுக்கு இவர் சென்றார். உடல் பயிற்சியைமுடித்துவிட்டு காரில் ஏறிய இவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டனர்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் நரேந்திர மோடியை, ஹரேன் பாண்ட்யாவின்ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் தடுக்க முயன்றனர். மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். மோடிக்கு மட்டும் எதற்குகமாண்டோ படை? எங்கள் தலைவருக்கு ஏன் பாதுகாப்புத் தரவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
குஜராத்தில் சட்டம்-ஒழுங்கை நரேந்திர மோடி கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டாக ஹரேன் பாண்ட்யாவின் பெற்றோர்களும் குற்றம்சாட்டினர். இந்த சாவுக்கு மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
பாண்ட்யாவின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் ஆழ்ந்த இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க துணைப் பிரதமர் அத்வானி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் குஜராத்விரைந்துள்ளனர்.