ஆமை பொம்மை, கொசு வலை, தீச்சட்டி... மதுரை மாநகராட்சியில் பரபரப்பு
மதுரை:
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் அதிமுககவுன்சிலர்கள் ஆமை பொம்மை, கொசு வலை, தீச்சட்டியுடன் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
மாநகராட்சி கூட்டம் இன்று காலை கூடியபோது மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் ஆமை பொம்மைகளுடன் வந்தனர்.
வளர்ச்சிப் பணிகளில் மாநராட்சி நிர்வாகம் ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், மெத்தனமாக இருப்பதாகவும்கூறி கையில் "சிம்பாலிக்"காக ஆமையை எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல நகரில் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளதை மாநகராட்சிக்கு உரைத்துக் காட்டுவதற்காக கொசுவலையுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக உறுப்பினர் ராஜபாண்டியன் சுடுகாட்டுக்கு எடுத்துப் போகும் தீச்சட்டியை ஏந்தி வந்தார்.இந்தச் செயல்களால் கூட்டத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தாலும் அதன் பின்னர் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் வழக்கம்போல் கூட்டம் நடந்தது.
-->