இந்தியா, பாகிஸ்தான் ஏவுகணைகள் சோதனை

Subscribe to Oneindia Tamil

பலசூர் (ஒரிசா):

தரையிலிருந்து தரையில் பாய்ந்து சென்று தாக்குத் திறன் வாய்ந்த இந்தியாவின் பிருத்வி ரக ஏவுகணை இன்றுவெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானும் இன்று அப்தாலிஏவுகணையை ஏவி சோதனை செய்தது.

ஒரிசாவின் சந்திப்பூர் கடலில் அமைந்துள்ள சோதனைத் தளத்திலிருந்து பிருத்வி ஏவுகணை காலை 11.30 மணிக்குஏவப்பட்டது.

சுமார் 8.5 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் தடிமனும் கொண்ட இந்த ஏவுகணை தன்னுடைய இலக்கைச் சரியாகத்தாக்கியது.

ஒரு டன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இந்த பிருத்வி ஏவுகணை முழுக்கமுழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. சுமார் 40 கி.மீ. தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் பெற்றது இது.

ஆனாலும் சுமார் 150 கி.மீ. தூரத்திற்குச் சென்று தாக்கும் வகையில் பிருத்வி ஏவுகணையின் தொழில்நுட்பம்மேம்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையினர் (டி.ஆர்.டி.ஓ.) நடத்தும் வழக்கமான சோதனைதான் இன்றும் நடைபெற்றதாகபாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1988ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து இன்று வரை மொத்தம் 16 முறை பிருத்வி ஏவுகணைபரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானும்...

இதற்கிடையே பாகிஸ்தானும் இன்று தன்னுடைய அப்தாலி ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்து பார்த்தது.

அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதுஎன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான அஸிஸ் அகமது கான் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+