அவசரமாய் கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
ஐ.நா.சபை:
அரபு நாடுகள், அணி சேரா நாடுகளின் கோரிக்கையை ஏற்று இன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரமாகக் கூடுகிறது.
ஈராக்கில் போரைத் தடுத்து நிறுத்த உடனே ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலைக் கூட்ட வேண்டும் என இந்த நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30க்கு இக் கூட்டம் தொடங்கும்.
போரை அமெரிக்கா உடனே நிறுத்த வேண்டும் என குவைத் தவிர்த்த 22 அரபு நாடுகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல 115 நாடுகள் கொண்ட அணி சேரா நாடுகள் அமைப்பும் போரை நிறுத்த ஐ.நா. தலையிட வேண்டும் என கோரியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறாத நாடுகளும் கூட பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போருக்கு எதிராகதீர்மானம் கொண்டு வரப்படுமா என்று தெரியவில்லை.
ஏனெனில் அப்படிப்பட்ட தீர்மானம் கொண்டு வந்தால் அதை அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது வீடோ அதிகாரத்தைக் கொண்டு ரத்துசெய்துவிட முடியும். இதனால் இக் கூட்டத்தால் பெரிய பலன் ஏதும் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
இந் நிலையில் ஈராக்கில் போரை நிறுத்துமாறு பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கோரிக்கை வைக்கும். அதற்கு ஆதரவாகநாடுகளையும் திரட்டும் என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இகார் இவானோவ் கூறினார்.
-->