அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவசர ஆலோசனை: விரைவில் போராட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதை திரும்பப்பெறக் கோரி போராட்டம் நடத்துவது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின்நிர்வாகிகள் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டுவருகின்றன. உச்சகட்டமாக ஓய்வூதியர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள், சலுகை ரத்துகளை அரசுஅறிவித்துள்ளது.

இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சரண் விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அரசு பறித்துள்ளது.

இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக அரசு ஊழியர்கள் ஒன்றியம்அறிவித்துள்ளது.

ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள இந்த ஒன்றியத்தின் தலைவர் சூரியமூர்த்தி வெறும் கண்துடைப்புக்காகவே இந்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசு ஊழியர்களில்பெரும்பாலோர் கருதுகிறார்கள்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டக் குழுவான"ஜாக்டியோ-ஜியோ" அமைப்பின் அறிவிப்பை பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்எதிர்பார்த்துள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் "ஜாக்டியோ-ஜியோ" அமைப்பின் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம்சென்னையில் நேற்று நடந்தது. இதில் "ஜாக்டியோ-ஜியோ" அமைப்பின் பல்வேறு நிர்வாகிகள்கலந்து கொண்டு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+