அமெரிக்கப் படைகளை நதியை கடக்க விடாமல் தடுக்கும் ஈராக்கி ராணுவம்
சமாவா:
சமாவா நகரின் அருகே யூப்ரிடிஸ் நதியைக் கடத்து வந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் படைகளை சுமார் 1,500பேர் கொண்ட ஈராக்கிய தற்கொலைப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் இரு தரப்பினருக்கும் இடையேபலத்த சண்டை நடந்து வருகிறது.
இந்தப் புயலைப் பயன்படுத்தி சுமார் 1,500 ஈராக்கிய வீரர்கள் யூப்ரிடிஸ் நதிகளின் பாலங்களைக்கைப்பற்றியுள்ளனர். இந்தப் பாலங்களைக் கடக்க முயலும் அமெரிக்கப் படைகளைத் தாக்கி வருகின்றன.
ஏற்கனவே சில படைப் பிரிவுகள் இந்தப் பாலங்களைக் கடந்து பாக்தாத் நோக்கி சென்றுவிட்டன. இந்தப்படைகளையும் ஈராக்கிய தற்கொலைப் படைகள் தாக்கி வருகின்றனர்.
புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சில படைகள் இன்று தான் முன்னேற ஆரம்பித்தன. இந்தப் படைகளை ஈராக்கியராணுவத்தினர் பாலங்களின் அருகே தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஈராக்கியப் படைகளின் மீதுடாங்குகள், அபாச்சி ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்கப் படைகள் தாக்கி வருகின்றன.
ஆனால், ஈராக்கிய வீரர்கள் தொடர்ந்து அந்தப் பாலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்துக்கொண்டுள்ளனர். இதனால் அமெரிக்கப் படைகளின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
குவைத் மீது ஏவுகணை தாக்குதல்:
குவைத் மீது ஈராக் இன்று மீண்டும் ஏவுகணையைச் செலுத்தி தாக்குதல் நடத்தியது.
ஆனால், அதனை அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகள் விண்ணில் தகர்த்ததால் குவைத்தில் எந்தச் சேதமும்ஏற்படவில்லை.
-->












Click it and Unblock the Notifications