சவுதியின் அமைதி திட்டம்: ஈராக் நிராகரிப்பு
பாக்தாத்:
போரை முடிவுக்குக் கொண்டு வர சவுதி அரேபியா பரிந்துரைத்த திட்டத்தை ஈராக் நிராகரித்துவிட்டது.
முன்னதாக இத் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து இந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவை ஆதரித்து வந்தாலும் இந்தப் போரை சவுதி எதிர்த்து வருகிறது.
இத் திட்டத்தை நிராகரித்த ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப் கூறுகையில்,
அமெரிக்காவுக்கு உதவும் சவுதி அரசின் சதிகளில் இதுவும் ஒன்று. இத் திட்டத்தை ஒட்டுமொத்தமாதநிராகரிக்கிறோம். எங்கள் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேறுவது ஒன்று தான்போரை நிறுத்துவதற்கு ஒரே வழி.
இல்லாவிட்டால் அவர்களைக் கொன்று குவிப்போம் என்றார்.
ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துமா ஈராக்?
போரில் இதுவரை ரசாயன ஆயுதம் எதையும் ஈராக் பயன்படுத்தவில்லை என பிரிட்டிஷ்- அமெரிக்கப் படைகள்கூறியுள்ளன. ஆனால், அதை ஈராக் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்தப் படைகள் கூறியுள்ளன.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜெப் ஹூன் நிருபர்களிடம் பேசுகையில், இதுவரை ஈராக் அந்தத் தவறைச்செய்யவில்லை. இனியும் செய்யாது என்று நம்புகிறோம் என்றார்.
-->