For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஐ.நா. சபை:

போரில் ஈராக் நாட்டு அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் நியாயமில்லாதது என இந்தியாவும் மலேசியாவும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தன. மலேசியாவும் ஈராக்கும் ஐ.நா. சபையை மிகக் கடுமையாககண்டித்துப் பேசின.

காட்டுமிராண்டித்தனமாக நடந்து வரும் ஒரு தாக்குதலை ஐ.நா. கண்டும் காணாமல்உட்கார்ந்திருப்பது வெட்கக்கேடானது என மலேசியத் தூதர் கூறினார்.

அணி சேரா நாடுகள் மற்றும் அரபு லீக் நாடுகளின் கூட்டமைப்புகள் கோரிக்கையை ஏற்று ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் அவசரமாகக் கூடியது.

இதில் போர் காரணமாகத் தவித்துக் கொண்டிருக்கும் சுமார் 1.3 கோடி ஈராக் மக்களுக்குத்தேவையான உணவு, குடிநீர் வழங்கும் பணிகளை விரைவில் தொடங்குவது குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகளின் தாக்குதலில் ஈராக்கில் உள்ள அப்பாவி மக்கள்கொல்லப்படுவது அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் இதனால் ஐ.நா. சபை மிகவும் கவலைஅடைந்துள்ளதாகவும் அன்னான் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தையும்அமெரிக்காதான் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ஐ.நாவும் அவசரமாக இரண்டு உதவிக் குழுக்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது.தங்கள் எச்சரிக்கையையும் மீறி ஈராக் மீது போர் தொடுக்க முடிவு செய்ததற்காக அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வன்மையாகக் கண்டித்தது.

தொடர்ந்து கூட்டம் நடந்து வருகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X