புதிய நிமோனியா நோய்: தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சீனாவில் தோன்றி பின்னர் உலகெங்கிலும் பரவி வரும் நிமோனியா நோயிலிருந்து தமிழகமக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகஅரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் நடந்து வரும் விவாதத்தின்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சரானசெம்மலை இதைத் தெரிவித்தார்.

உலகெங்கிலும் வேகமாகப் பரவி வரும் இந்த நிமோனியா நோய் காரணமாக சிங்கப்பூரில் 60பேரும், சீனா உள்ளிட்ட மற்ற சில நாடுகளில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சட்டசபையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு செம்மலை பதிலளிக்கையில்,

இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசுமேற்கொள்ளும்.

அனைத்து விமான நிலையங்களிலும், குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். ஏனென்றால் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஏராளமான விமானங்கள்இயக்கப்படுகின்றன.

அங்கிருந்து வருபவர்கள் அனைவரும் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே விமானநிலையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல் சென்னை துறைமுகத்திலும் மருத்துவக் குழுவினர் செயல்படுவார்கள்.

இதுவரை நம் நாட்டில் இந்தப் புதிய நிமோனியா நோய் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அதுஇங்கு பரவாமல் இருக்க இதுபோன்ற முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும். எனவே இது குறித்துயாரும் பயப்பட வேண்டாம் என்றார் செம்மலை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+