கண்ணி வெடிகளை கண்டறியும் டால்பின்கள்
உம் காசிர்:
ஈராக் போரின்போது கடலில் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்ககடற்படையினர் 2 டால்பின்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
போர் தொடங்குவதற்கு முன்பே ஈராக்கின் ஒரே துறைமுக நகரான உம் காசிர் நகரைச் சுற்றிலும்உள்ள கடல் பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகளை ஈராக் கடற்படையினர் மிதக்க விட்டிருந்தனர்.
தற்போது உம் காசிர் நகரை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து கடல் பகுதியில்மிதந்து கொண்டிருக்கும் கண்ணி வெடிகளைக் கண்டறியும் பணியில் இரண்டு டால்பின்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தகோமா மற்றும் மக்காய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டால்பின்களுக்கு அமெரிக்ககடற்படையினர் நன்கு பயிற்சி கொடுத்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின்கொரொனாடோவில் உள்ள கடற்படைத் தளத்தைச் சேர்ந்தவை இந்த டால்பின்கள்.
குறிப்பிட்ட கண்ணி வெடிகளைத் தங்களுடைய "சோனார்" திறன் மூலம் கண்டறிந்து கொள்ளும் இந்தடால்பின்கள், அவற்றைத் தொட்டு விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக கண்ணி வெடி இருப்பதைக்குறிக்கும்பொருட்டு மிதந்து காண்பிக்கும்.
அதைக் கொண்டு கடற்படையினர் அங்கு கண்ணி வெடி இருப்பதைத் தெரிந்து கொண்டு அவற்றைஅகற்றி வருகிறார்கள்.
-->