கள்ள 100 ரூபாய் நோட்டு புழக்கம்: மதுரையில் 5 பேர் கைது
மதுரை:
மதுரையில் ரூ.100 கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட 5 பேர் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
மதுரை-கோமதிபுரம் பகுதியில் பழ வியாபாரி ஒருவரிடம் பழம் வாங்கிய ஒருவர் நூறு ரூபாய்த்தாளைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய வியாபாரிக்கு ரூபாய் நோட்டின் மீது சந்தேகம்ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அந்நபரைக் கூட்டிச் சென்றார் வியாபாரி.அங்கு ரூபாய் நோட்டைப் பரிசோதித்தபோது அது கள்ள நோட்டு என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்நபரை போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் சதானந்தம். அவரிடம்நடத்திய விசாரணையில், அன்பு நகரில் ஒரு வீட்டில் வைத்து கள்ள நோட்டு அச்சடிக்கப் படுவதாகதகவல் கிடைத்தது.
உடனடியாக அன்பு நகருக்கு போலீஸ் படை விரைந்தது. அங்கு கம்ப்யூட்டர், ஸ்கேனர்ஆகியவற்றை வைத்து நூறு ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த விஜயன், ஜோ உள்ளிட்ட 4 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.இவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இதுவரை ரூ.7.5 லட்சம் அளவுக்கு நூறு ரூபாய் கள்ள நோட்டுக்களை இவர்கள் புழக்கத்தில்விட்டுள்ளதும் தெரிய வந்தது.
-->