For Daily Alerts
Just In
விஷ வாயு: 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி சாவு
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர் குளம் என்ற இடத்தில் உள்ள தோல் பதனிடும்தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர்.
தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் ஒரு ஊழியர் தோல்களை சுத்தப் படுத்தும்தொட்டிக்குள் விழுந்து விட்டதாகத் தவறான தகவல் பரவியது.
இதையடுத்து 8 பேர் தொட்டிக்குள் இறங்கி தேடியுள்ளனர். அப்போது விஷ வாயு பரவி 5 பேர்இறந்தனர்.
மேலும் மூன்று பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக அந்த மூன்று பேரும் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
தவறான தகவலைத் தெரிவித்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->
Story first published: Friday, March 28, 2003, 5:30 [IST]