கீரிப்பட்டியிலும் தேர்தல் ரத்து
மதுரை:
கீரிப்பட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த 2 பேர் நேற்று தங்கள் மனுக்களை வாபஸ்பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாயத்துத் தேர்தல் மீண்டும்ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாபட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துத்தொகுதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
உயர் ஜாதியினரின் மிரட்டல் காரணமாகக் கடந்த ஏழு ஆண்டுகளா இந்த மூன்று தொகுதிகளில்பஞ்சாயத்து தலைவர்களே தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலதலைவர்களும் உயர் ஜாதியினர் மிரட்டல் காரணமாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிடுகின்றனர்.
இம்முறை அறிவிக்கப்பட்ட தேர்தலில் பாப்பாபட்டி மற்றும் நாட்டார்மங்கலத்தில் யாருமே வேட்புமனு கூடத் தாக்கல் செய்யவில்லை. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
கீரிப்பட்டியில் க. சுப்பன் மற்றும் அ. சுப்பன் ஆகிய இருவர் மட்டுமே வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்திருந்தனர். இருவர் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டன.
இந்நிலையில் நேற்று தங்கள் கிராம மக்களுடன் யூனியன் அலுவலகத்திற்குச் சென்ற இருசுப்பன்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இந்த தலித் பஞ்சாயத்துத்தொகுதியைப் பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று இருவரும் கூறியதும் அதிகாரிகள் விக்கித்துநின்றனர். பின்னர் வேறு வழியில்லாமல் அவர்களுடைய மனுக்களைத் திருப்பிக் கொடுத்தனர்.
இதனால் கீரிப்பட்டியிலும் இந்த முறை தேர்தல் நின்று விட்டது.
-->