தூக்கு தண்டனை கைதியை மணக்க விரும்பும் காதலி
சென்னை:
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு கைதியாக உள்ள தன் காதலரைத் திருமணம் செய்து கொள்ளஅனுமதிக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூங்குளத்து விளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷகீதா. இவரும் ஷேக்மீரான் என்பவரும் காதலித்து வந்தனர். ஷேக் மீரானைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகவேஇந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறியவர் ஷகீதா.
இந்நிலையில்தான் விதி விளையாடியது. கொலை வழக்கு ஒன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுதிருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டார் மீரான்.
ஆனாலும் காதலன் மேல் தளராத நம்பிக்கையுடன் இருந்த ஷகீதா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். தன் காதலரைத் திருமணம் செய்து கொள்வதற்காக 10நாட்களுக்கு அவரை பரோலில் விடுதலை செய்யுமாறு கோரினார்.
ஆனால் மாநில அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தைத் தற்போது அணுகியுள்ளார் ஷகீதா. அவருடைய மனுவை விசாரித்த நீதிபதிசதாசிவம், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுக்குஉத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஷேக் மீரானுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே உறுதி செய்துள்ளன. இதைத் தொடர்ந்து ஆளுநருக்குகருணை மனு அனுப்பினார் மீரான். அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கடைசி முயற்சியாகக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார் மீரான்.அதன் மீது இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
-->












Click it and Unblock the Notifications