மாறன் சிகிச்சை செலவு: சட்டசபையில் திமுக-அதிமுகவினர் மோதல்
சென்னை:
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு ஆகும் செலவுகள்தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காராசாரமானவிவாதம் நடந்தது.
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகஉறுப்பினர் ஒருவர் எழுந்து மாறனின் மருத்துவச் செலவுகள் குறித்து அறிந்து கொள்ளவிரும்புவதாகக் கூறினார்.
அப்போது திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி எழுந்து, "இந்தக்கேள்வியை இங்கே எழுப்புவது சரியல்ல. அதுவும் மாறன் இன்னும் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் கேட்பது முறையல்ல" என்றார்.
உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து, "வீராசாமி இவ்வாறு பேசுவதுதான் தவறு. நாட்டு மக்களின்வரிப் பணத்திலிருந்து மாறனின் மருத்துவத்துக்காகச் செலவு செய்யப்படுகிறது. எனவேஇந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தக் கேள்வியைக் கேட்க உரிமை உண்டு" என்றார்.
அப்படியே உரிமை இருந்தாலும் இந்தக் கேள்வி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட வேண்டியகேள்வியே தவிர இங்கு கேட்டிருக்கக் கூடாது என்று கூறிய சட்டசபை திமுக துணைத் தலைவரானதுரைமுருகன், "இது தொடர்பாக அதிமுக எம்.பிக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில்கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மத்திய அரசும் உரிய பதிலை அளித்து விட்டது" என்றார்.
இதைத் தொடர்ந்து அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
-->












Click it and Unblock the Notifications