உசிலம்பட்டியில் அரசு பஸ் டிரைவர் படுகொலை
உசிலம்பட்டி:
உசிலம்பட்டியில் கடன் பாக்கியைத் தராத அரசு பஸ் டிரைவரைக் கொன்ற தந்தை-மகனைப்போலீசார் தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி அரசு பஸ் டிப்போவில் டிரைவராகப் பணியாற்றியவர் மனோகரன். இவர் வடகரைப்பட்டியைச் சேர்ந்த வீரணன் என்பவரிடம் ரூ.30,000 கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பணத்தைக் கேட்டு சலித்துப் போனவீரணன் தன் மகன் விக்ரமுடன் நேற்று மாலை உசிலம்பட்டி பஸ் டிப்போவுக்குச் சென்றார்.
அப்போது மனோகரன் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்தவீரணனும், விக்ரமும் பணத்தைக் கேட்டு சண்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனோகரனை அவர்கள்சராமாரியாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மனோகரன் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து வீரணனும் விக்ரமும் தப்பி ஓடி விட்டனர். இந்தப் படுகொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும்ஏற்படுத்தியது.
-->