போரை எதிர்த்து அரபு நாடுகளில் மாபெரும் போராட்டங்கள்
ஸானா (ஏமன்):
ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்த்து அரபு நாடுகளின் போராட்டங்கள்தீவிரமடைந்துள்ளன.
ஏமன் நாட்டில் சுமார் 1 லட்சம் பேர் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். அமெரிக்காவுக்குஎதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். "ஈராக்குக்குதான் வெற்றி, ஏமனில் உள்ள அமெரிக்கதூதரகத்தை மூடு" என்பது போன்ற கோஷங்களையும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினர்.
ஏமன் மத விவகாரத் துறை அமைச்சகம் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைநடத்தியது. அப்போது ஈராக்கின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
இதற்கிடையே லெபனானிலும் போருக்கு எதிரான போராட்டம் வெடித்தது. பள்ளிக் குழந்தைகள்முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை சுமார் 5,000 பேர் பெய்ரூட்டில் உள்ள ஐ.நா. அலுவலகம்முன்பாகப் போராட்டம் நடத்தினர். தெற்கு லெபனானில் சுமார் 7,000 பெண்கள் பேரணி நடத்தினர்.
காஸாவிலும் சுமார் 2,000 பாலஸ்தீனியர்கள் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினார்கள்.அதேபோல் எகிப்திலும் சுமார் 10,000 பேர் போரை எதிர்த்துப் பேரணி நடத்தினர்.
-->












Click it and Unblock the Notifications